October 18, 2024

ஜி.நடுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி

திண்டுக்கல், ஜூலை 16

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஜி.நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் கார்த்தி முன்னிலையில் வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரமோகன் ஆலோசனைப்படி எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் செல்வ முகிலன் சிறுதானிய முக்கியத்துவம், சிறிதானிய சாகுபடி அதன் பராமரிப்பு முறை மற்றும் இயற்கை சாகுபடி முறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இப்பபிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விவசாயிகளை ஒருங்கிணைத்து பெரிதும் உதவினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.