October 18, 2024

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

சேலம், ஜூலை 12

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரம், தலைச்சோலை பஞ்சாயத்தில் வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான பயிற்சி மண்புழு உரம் தயாரித்தல் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆத்மா சேர்மன் தங்கசாமி தலைமை வகித்தார். மேலும் மண்புழு உரம் எவ்வாறு தயாரிப்பது அது எந்தெந்த பயிர்களுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முனைவர் செந்தில்குமார், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியின் போது தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மாலதி, கலந்து கொண்டு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டார். இப்பயிற்சிக்கான முழு ஏற்பாடுகளையும் ஏற்காடு வட்டார ஆத்மா அலுவலர்கள் துரையரசு அருண்குமார் மேற்கொண்டிருந்தனர்.