October 18, 2024

நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெளிவளாக பயிற்சி

கடலூர், ஜூலை 9

நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி 8.7.24 அன்று மேல்புளியங்குடி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.நடராஜன், முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர இரகங்கள் பற்றியும், விதை உற்பத்தி செய்யும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குலும் அதன் மேலாண்மை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஆகியவை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் செயல்முறையாகவும் காண்பிக்கப்பட்டது. இறுதியாக விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளிடம் தனது ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இப்பயிற்சியில் கடலூர் மாவட்ட சேர்ந்த முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள மேல்புளியங்குடி கிராமத்தில் உள்ள விவசாயிகள் 30 க்கும் மேற்பட்டேர் கலந்துக் கொண்டு பயனபெற்றனர்.