October 18, 2024

அட்மா திட்டத்தில் மண்புழு உரம் குறித்த பயிற்சி

அரியலூர், ஆக.3

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கான மண்புழு உரம் உற்பத்தி குறித்த பயிற்சி வாழைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் கலந்து கொண்டு பேசுகையில் மண்புழு உரமானது விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை பாதுகாத்து பயன்தரும் வரப்பிரசாதமாக திகழ்கிறது என கூறினார். மேலும் அவர் பேசுகையில் மண்புழுஉரம் இடுவதால் மண்துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர் பிடிப்புத்திறன் மேம்படுத்தப்படுகிறது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது. மேலும் மண்அரிப்பு, கோடைக்காலத்தில் மண்ணின் வெப்ப நிலை ஆகியவற்றை குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதை தடுக்கிறது. வாழை,தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப்பயிர்கள் கோடையில் முழுமையாக பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.

மேலும் மழைக்காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களைஎடுக்கும் புது வேர்கள் உருவாகமண்புழுஉரம் பயன்படுகிறது. இதனால் பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவும் மண்ணின் காரத்தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை
மேம்படுத்துகிறது.

மண் புழு உரத்தில் அதிகப்படியாகஅங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது. இது மண்ணின் வளத்தைமேம்படுத்தி பயிருக்குத் தேவையான சத்துப்பொருட்களை கொடுக்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது. குறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவைஅதிகரிக்கிறது. மண்புழு உரம் பயன்படுத்தப்படுவதால் மண்ணின் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து,காரஅமிலத்தன்மை சீர்படுகிறது. மண்புழுஉரம் இடுவதால் மக்காச்சோளம்,கம்பு, சோளம்,ப ருத்தி, சிறுதானிய பயிர்களின் மகசூல் அதி கரித்து, வறட்சியை தாங்கி வளர வாய்ப்பு உள்ளது என விரிவாகஎடுத்துக்கூறினார். மேலும் பயிர் நடவு செய்த பின்னர் கடைசி உழவில் ஏக்கருக்கு நெல்லுக்கு 1 டன்னும், கரும்புக்கு 1.5 ட ன்னும், பருத்திக்கு 1 டன்னும் ,மிளகாய்க்கு 1 டன்னும் பயன்படுத்தவேண்டும் எனவும் விவசாயிகள் மண் பரிசோதனைசெய்துபயிருக்கு ஏற்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட்டு செலவைக் குறைத்து மகசூல் எடுக்கலாம் என விரிவாக எடுத்துக்கூறினார். பயிற்சியின் முடிவில் மண்புழுஉரம் தயாரிப்புகுறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்று அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார்.