நூற்புழு மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு!

நூற்புழுக்கள் கணுக்களற்ற உருளை வடிவ புழுக்களாகும். இவை பயிர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து அவற்றினை சேதப்படுத்தி மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன.பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்படாடத பயிர்களே இல்லை எனலாம். இந்நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றி, வெளிர்நிறமடைந்து, இலைகள் மற்றும் காய்கள் சிறுத்து விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. நம் மாநிலத்தில் இதுவரை 90க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப்பயிர்களைப் பொறுத்து தேவையான அளவு விதைகளை வயலில்விதைத்து 40-45 நாட்களில் மடக்கி உழ […]

ஆடிப்பட்டத்தில் விதை பரிசோதனை செய்வீர்! உயர் விளைச்சல் பெறுவீர்!!

சுவரின்றி சித்திரம் வரைய முடியாது என்பது பழமொழி. நல்ல தரமான வீரியமிக்க விதைகள் பயன்படுத்தாமல் மகசூல் பெறமுடியாது என்பது புதுமொழி. தரமான விதைகளே, விவசாயியின் அடிப்படைச் சொத்து. விவசாயத்தின் அடித்தளமே நல்ல விதைகள் தான். பல விதமான நவீன முறைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டாலும் நல்ல தரமான முளைப்புத்திறன் கொண்ட விதைகள் தான் பயிரின் விளைச்சலைப் பெரிதும் நிர்ணயிக்கின்றன. தரமான விதையானது இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விதை சான்றளிப்புத் தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, மரபுத்தூய்மை, முளைப்புத்திறன் […]